வெள்ளி, 8 ஜனவரி, 2010

பாரதியார் பாடல்கள்

நிற்பதுவே நடபதுவே பரபதுவே
நீங்களெல்லாம் சொற்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களும்
சொற்பனம் தானோ பல தோற்ற மயக்கங்கலோ
கற்பபதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்பமா ய் களோ
உன்னுல் ஆழ்ந்த பொருள் இல்லையோ
அற்பமாய் எய்கள் உன்னுள் ஆழ்ந்த பொருள் இல்லையோ

வானகமே இளவெயிலே மரச்செறிவே
மீன்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சி பிழை தானோ
போனதெல்லாம் கனவினைபோல்
உதைந்தளிந்தே போனதனால்
நானும் ஒஅர் கனவோ
இந்த நிலம் ஒஅர் கனவோ
(nirpathuve)

காலம் என்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அந்த குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையும் என்றல்
மறைவதெல்லாம் காண்பதுண்டோ
நானும் ஒஅர் கனவோ
இந்த நிலம் பொய்தானோ
(nirpathuve)



நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ

(நல்லதோர்)

சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ

(நல்லதோர்)

விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ


தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!







காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேலை
புதிதான பொழுது எனதாகுமா
புரியாத புதிர் தான் எதிர்காலமா
பாடும் நிலா பூங்குயில் மௌனமான வேளையில்
(kaaviyam)
புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோற்சவம்
இவை மொழி இசைத்திடும் சுரங்களில் மனோஹர்ரம்
புது பிரபஞ்சமே புலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம் தான் பின்னாடி வந்ததோ
கரைந்து போகும் கானல் நிறிது
(kaaviyam)


வாலி பாடல்கள்

கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்

ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா


ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)

காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! (ஒரு)




உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை

(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

(உள்ளம் என்பது)



ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)



நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெள்ளம் நதியாக ஓடும் அதில்
இளனெஞ்சம் படகாக ஆடும்

(நான் பாடும்)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம் நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம் (2)
எங்கே நானென்று தேடட்டும் உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த (2)
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை (2)
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்

(நான் பாடும்)

நாதத்தோடு கீதம் உண்டாக தாளத்தோடு பாதம் தள்ளாட (2)
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை (2)
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2)
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்

(நான் பாடும்)



கவிஞர் வாலி - Kavinjar Vaali


From Thamizh Literature Through the Ages - Professor C.R. Krishnamurti

Kavignar VAli (கவிஞர் வாலி) has written the story of rAman using the puthuk kavithai (புதுக்கவிதை) style under the heading (அவதார புருஷன்). An example of how appealing the puthuk kavithaikaL can be, is illustrated in the following poem in which Kavignar VAli describes the scene when Hanuman met SIthai in the asOka vanam (அசோகவனம்):

எனை மீட்க-
ஐயன் வரலாம், மீட்டபின்
ஐயம் வரலாம் நான்
சிறை நீங்கினாலும் - என்
கறை நீங்குமா ?
மாற்றான் வசமிருந்த
மனையாளை - மன்னவன்
மனம் ஏற்றாலும்- ஊர்ச்
சனம் ஏற்குமா? - உற்றார்
இனம் ஏற்குமா ?
என்னைக்
கறந்தபால் என்று
கணிக்குமா ?- இல்லை
திரிந்த பால் இன்று
தவிர்க்குமா ? - நான்
ஆதர ¢த்த அருங்கற்பு
அப்பழுக்கு அற்றதென்று
முதரித்தல் எவ்வாறு ?- அது
முடியாத பட்சத்தில்- ஏனிங்கு
முடங்கியிருக்க வேண்டும் - ஓர்
அடிமையாய் இவ்வாறு ?
இன்னும் ...
உயிர்த்தென்ன புண்ணியம் ?
உயிர்நீப்பதே கண்ணியம் ,
வற்கலை அணிந்திருந்த
வைதேகியின் உள்ளத்தில்
தற்கொலை எண்ணம தலையெடுக்க -
ஒரு -
குரக்கத்திக் கொடியைக்
கழுத்தில் சுற்றி - அவள்
சுருக்கிட்டுக் கொண்டு சாக நினைக்க ...
அன்னையின் எதிரில்
அனுமன் குதித்தான்
அன்னைக்கு அனைத்தனையும்
ஆதியோ டந்தமாய்
அனுமன் விளக்கினான் அன்னையின்
அகத்தில் அப்பியிருந்த
ஐயப்பாடு எனும் -
அழுக்கைத் துலக்கினான்
வார்த்தைகளால் -
வள்ளல் ராகவனின் -
கருமேனியை - வண்ணத்
திருமேனியை- ஒரு
வரைபடமாய் வரைந்து
காகுத்தன் மனைவிக்குக்
காட்டினான், பின்பு
நம்பி சொன்னவற்றை
அம்பிகைக்குச் சொல்லி-
நம்பிக்கையை ஊட்டினான்.
மகிழ்ந்தாள்- மைதிலி
நெகிழ்ந்தாள்

...........
பேரானந்தத்தில் - பிராட்டி
பேச்சற்று நின்ள்
கணையாழியை- ஈரக்
கன்களால் தின்றாள்.

chandrodhayam oru pennanatho Music: MSV, Singers: T.M.S & P.Susheela - lyric selected and presented by Rajesh Kumar, 25 August 2005
chandrodhayam oru pennanatho
senthaamarai irukannanatho
ponoviyam yendru peraanatho
yen vaasal vazhiyaaga valam vanthatho
chandrodhayam oru pennanatho
senthaamarai irukannanatho

kulir kaatru killatha malarallavo
kilivanthu kothaatha kaniallavo
nizhalamegam thazhuvaatha nilavallavo
nenjodu nee sertha porulallavo
yennalum piriyaatha uravallavo

ilam sooriyan unthan vadiv! aanatho
sevvaname unthan niramanatho
ponmaaligai unthan manamaanatho
yen kaadhal uyir vaazha idam thanthatho

muthaaram sirikindra sirippalavo
ul nenjl thodugindra neruppalavo
sangeetham pozhigindra mozhiyallavo
santhosham varugindra vazhiallavo
yenkovil kudikona silaiallavo - chandrodhayam

alaiyodu piravaatha kadal illaye
nizhalodu nadakkatha udal illaye
thudikkatha imayodu vizhi illaye
thunaiodu seraatha idham illaye
yen meni unathandri yenathillaye

idhazhodu idhazh vaithu imai moodavo
vizhugindra sugam vaanga thadai podavo
madi meethu thalai vaithu ilaipaaravo
mugathodu mugam vaithu muthaadavo
kanjaadai kavi solla isai paadavo

ilam sooriyan unthan vadivaanatho
sevvaname unthan niramanatho
ponmaaligai unthan manamaanatho
yen kaadhal uyir vaazha idam thanthatho
அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது

(அம்மா)

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

(அம்மா)

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

(அம்மா)

உலகத்தின் தூக்கம் கலையாதோ...

உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தால் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்

நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெள்ளம் நதியாக ஓடும் அதில்
இளனெஞ்சம் படகாக ஆடும்

(நான் பாடும்)

தாழம்பூவில் காணும் பொன்வண்ணம் நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம் (2)
எங்கே நானென்று தேடட்டும் உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த (2)
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை (2)
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்

(நான் பாடும்)

நாதத்தோடு கீதம் உண்டாக தாளத்தோடு பாதம் தள்ளாட (2)
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை (2)
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2)
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்

(நான் பாடும்)

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

(நீ ஒரு)

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

(நீ ஒரு)

பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே...
கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தாள் என்னோடு
மணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

(நீ ஒரு)

வாழ்வே மாயம்

வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?

(வாழ்வே)

யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)

பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது

(வாழ்வே)



கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க

தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்

உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ

கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்




ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)



எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போஅகும் வழியாய்
எந்தன் மனது அறியுமே

என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோய கூட்டுமே

உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையே
காதல் பூக்கள் உதிருமா ?

(எனக்கு பிடித்த )

மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிராய்
விட்டு விளக்கும் போது

நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையாய் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மொஅக்த்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோர் காத்தாடி ஆகிறேன்


(எனக்கு பிடித்த )

Na na na na
aah aaah aaaah

வெள்ளி கம்பிகளை போல
ஒரு தூறல் போடுதொ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர் துளி நீங்கினால்
நீ தொடும் ஞாபகம்

நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைகிறாய்
மேகம் பொல எனக்குள்ளே
மொகாம் வளர்த்து கலைகிறாய்

(yenakku pidiththa)


ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
தங்கநிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோஅகையா அருளில்லையா

(oam...)

பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் சலங்கை படிக்க
(சுவரங்கள் )
ராகம் பார்வையே எட்டுதிசைகலே
உன் சொற்களே நவரசங்கலே
கயிலாச மலைவாசா கலையாவும் நீ
புது வாழ்வு பெறவே அருள்புரி நீ

(oam...)

மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்
கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி பெறவே துடிக்கும்
(suvarangal)
அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ
நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ

(oam...)


ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல்
மாய கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ - அவன்
வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆரரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆரரோ

(ஆயர் )

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ - அந்த
மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆரரோ ...
மண்டலமே உறங்குதம்மா ஆரரோ ...

(ஆயர் )

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடி அதில்
தாபம எல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ - அவன்
மோக நிலை கூட ஒரு யோகா நிலை போலிருக்கும்
யாரவனை தூங்க விட்டார் ஆரரோ ..
யாரவனை தூங்க விட்டார் ஆரரோ ..

(ஆயர் )

கண்ணனவன் தூங்கி விட்டால் காசினியே தூங்கி விடும்
அன்னையர் துயில் எழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகி பார்பதற்கும் போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியர் கோபியர் வாரீரோ ..
கன்னியர் கோபியர் வாரீரோ ..

(ஆயர் )



சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த
அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.


கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா? (கல்)

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ணக் கல்லல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா
மின்னல் இடையல்லவா!

கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதிமங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! என்றும் நீயே கதி! (கல்)

படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்த
வரிகள் : கண்ணதாசன்
குரல் : சௌந்தரராஜன்

போனால் போகட்டும் போடா -
இந்தபூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

போனால்......)

வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில்ஜனனம் என்பது வரவாகும்
வரும்மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...

(போனால்..)

இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லையென்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது
இதுகோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக்கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது போனால் போகட்டும் போடா...

(போனால்.)

எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன்நாலும் தெரிந்த தலைவனடா
தினம்நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்.)





மயக்கமா கலக்கமா..மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)



படம் ஆலயமணி
பாடியவர் t.m.s

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா -
நான்இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா